காதல் மனைவியையும், குழந்தையும் எரித்து கொலை செய்த கொடூர கணவன்! அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal



தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், சுசித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அத்தனையும் மீறி இருவரும் 2015ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்துகொண்டனர், இதனையடுத்து இருவரும் ஐதராபாத்திற்கு சென்று வசித்துவந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயின் வீட்டிற்கு சென்றார் சுசித்ரா.

இதனையடுத்து தனது வீட்டிற்கு வருமாறு மனைவியை ரமேஷ் அழைத்துள்ளார். கணவரின் அழைப்பை ஏற்று சமாதானம் பேச தன்னுடைய 4 மாத குழந்தையை தூக்கி சென்றுள்ளார் சுசித்ரா. அங்கு மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுசித்ரா, மயக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு, அதனை பாலில் கலந்து குழந்தைக்கும் கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயக்க நிலையில் இருந்த அவர்கள் இருவரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று  இருவரையும் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த போலீசார் ரமேஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husban kille wife and child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->