#ஜம்மு காஷ்மீர் || இந்து தொழிலாளி சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் வெறிச்செயல்
Hindu worker killed in terrorist attack Anantnag Jammu Kashmir
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரை சேர்ந்தவர் தீபு. இவர் அனந்த்நாக் மாவட்டம் ஜங்லாத் மண்டி பகுதியில் நடந்த சர்க்கஸ் மேளாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்குச் சென்ற தீபு மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீபுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் தீபு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விரைவில் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Hindu worker killed in terrorist attack Anantnag Jammu Kashmir