கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்.!-மத்திய அமைச்சகம்
கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்.!-மத்திய அமைச்சகம்
நாட்டிற்காக போரில் வீரமரணம் அடைந்த போர்விரர்களின் குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் அரசு ஏற்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.அதன் விவரம் ...
நாட்டிற்காக இதற்கு முன் போர் மற்றும் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு கல்விச் செலவாக இதற்குமுன் ரூ.10 ஆயிரம் கொடுத்து வந்தது. தற்போது அதனை மாற்றி அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்பதாகத் கூறியுள்ளது.அதன்படி பாதுகாப்பத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பது:
வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கு ஆகும் கல்வி செலவுக்கு வழங்கும் தொகைக்ககனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
அதாவது அவர்களுக்கு ஆகும் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும்.இதில் குறிப்பாக அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்,சுயாட்சிக் கல்லூரிகள், ராணுவப் பள்ளிகள், , மத்திய, மாநில அரசுப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், , பல்கலைக்கழகங்கள்,சைனிக் பள்ளிகள் முதலியவற்றில் கல்விச் செலவை அரசு ஏற்கும். அதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஒப்புதல் அளித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
government takeover all education fee