அந்த நபரின் கடிதத்தை பார்த்து ஆடிப்போன மோடி, எங்கே இருந்தது வந்தது..? இரண்டு பெண்களுக்கு என்ன நடந்தது..?
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, திவ்ய பாண்டே மற்றும் அன்கித் வர்மா ஆகியோர் கடந்த ஆண்டு தன்னை கற்பழித்ததாக போலீஸில் புகார் கொடுத்து இருந்தனர்
காவல்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதற்கு நடுவே, புகார் அளித்த பெண்ணின் பெயரில் போலியாக முகநூல் கணக்கை தொடங்கி அவரது ஆபாச படங்களையும் அப்டேட் செய்யபட்டுள்ளது..
மேலும் தனது மகளை குற்றம்சாட்டப்பட்டவர்கள் மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீண்டும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இவ்விரு புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது..
இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு ரத்தத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியவாறு,
தங்கள் மீது போடப்பட்ட கேஸை திரும்பப்பெற வேண்டும் என குற்றவாளிகள் மிரட்டி வருகின்றனர்.
அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ளதால், காவல்துறையும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது
மேலும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என அந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டு இருந்தது..
English Summary
girl wrote a letter for PM and UP CM