கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தபோதே, நேர்ந்த பயங்கரமான கொடூரம்! விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்துவந்தவர் ரன்வித் கவுர். இந்திய வம்சாவளியான இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் விடுமுறையின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்துள்ளார்.

 மேலும் மார்ச் மாதம் இறுதியில் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்காக திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில் கடந்த வாரம் பஞ்சாபில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு வெளியே நின்று  ஆஸ்திரேலியாவிலுள்ள கணவருடன் ரன்வித் கவுர் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அந்தப் பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ரின்வித் கடத்தப்பட்டு பத்து நாட்கள் நாட்களுக்கு மேல் கடந்த நிலையில், இவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டார்.

       

மேலும் அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரின்வித்  கடத்தப்பட்ட அன்றே கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் இக்கொலையில் பெண் ஒருவர் சம்பந்தப்பட்டு  இருப்பதை கண்டறிந்தனர்.

 ரஞ்சித் கவுரின் கணவருக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் ,அவரை பஞ்சாபில் அந்த பெண்தான் கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.மேலும் ரின்வித் கடத்தி கொலை செய்யப்பட்ட அன்று அந்த பெண் பஞ்சாபில் இருந்ததாகவும் கொலை நடந்த மறுநாள் அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

 இதனை தொடர்ந்து போலீசார் ஆஸ்திரேலியாவில் உள்ள ரஞ்சித்தின் கணவரை பஞ்சாபிற்கு விசாரணைக்கு அனுப்பி வைக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl kidnapped and killed by husband illegal affairs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->