தலை துண்டிக்கப்பட்டு, தலைகீழாய் கட்டித் தொங்கவிடப்பட்ட வெளிநாட்டு பெண்! கேரளத்தை கதிகலங்க வைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அழுகிய நிலையில் தலை இல்லாமல், தலைகீழாய் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கடந்த மாதம் காணாமல் போன தனது சகோதரி லிகா தான் என்று  லித்வேனியா நாட்டை சேர்ந்த வெளிநாட்டு பெண் இலீஸ் தெரிவித்துள்ளார்.

லிகா கடந்த மாதம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகா பயிற்சிக்காக திருவனந்தபுரம் அருகே போத்தன்கோட்டில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சகோதரி இலீசுடன் வந்தார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது கடந்த மாதம் 4ம் தேதி திடீரென லிகா மாயமானார். இதுகுறித்து சகோதரி இலீஸ் போத்தன்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லீகாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலில் இருக்கும் ஆடைகள் தன சகோதிரியுடையது தான், அவரை யாரோ கொலை செய்து இருக்கலாம். போலீஸ் விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை ’’என்று இலீஸ் கூறியுள்ளார். உடல் கிடந்த பகுதி போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாடும் பகுதியாகும். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foreign woman hanging her head up and hanging up The incident happened in Kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->