பெங்களூரில் இந்திய விமானப்படை நிகழ்ச்சில் விபரீதம்.!! பற்றி எறிந்த 500 க்கும் மேற்பட்ட கார்கள்.!! பதறி அடித்து ஒடிய மக்கள்.!!
fire accident in Bangalore
பெங்களூரில் இந்திய விமானப்படை நிகழ்த்திய சாதனை நிகழ்ச்சியின் வாகன நிறுத்துமிடத்தில் நிருபட்டிருந்த கார்கள், பைக்குகள் எரிந்து நாசமாகி உள்ளன.
கடந்த 20-ந் தேதி கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவின் எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தியது. இதனை ஆயிரக்கணக்கான பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாலாவது நாளான இன்று நிகழ்ச்சி நடைபெற ஆரம்பித்த சில நிமிடங்களின், பொதுமக்களின் கார் பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் மளமளவென அருகிலுள்ள கார்களுக்கு வேகமாக பரவியந்து.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தினால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக கட்சி அளித்தது. பொது மக்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
English Summary
fire accident in Bangalore