மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை! விசாரணையில் வெளிவந்த பதறவைக்கும் அதிர்ச்சி காரணம்.!
father and son suide at same time
ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்தவர் லலித் பிரகாஷ்.63 வயது நிறைந்த இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
அவர்களில் முதல் இரண்டு மகள்கள் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகின்றனர்.மேலும் மூன்றாவது மகள் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தந்தை லலித் பிரகாஷ், தாய் மற்றும் நான்காவது மகள் கிருத்திகா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று லலித் பிரகாஷின் மனைவி மற்றும் மூன்றாவது மகள் கோவிலுக்குச் சென்ற நிலையில் வீட்டில் இருந்த லலித் பிரகாஷ் மற்றும் அவரது நான்காவது மகள் கிருத்திகா இருவரும் வீட்டின் உள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிரகாஷின் மனைவி மற்றும் மகள் இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வீரர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் லலித் பிரகாஷ் சில மாதங்களுக்கு முன்பு சிலரிடம் அதிக அளவு பணம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை அவரால் திருப்பி தர முடியாததால் வீட்டை அடமானம் வைத்துள்ளார். இதனால் அவர் பெரும் மனவேதனையில் இருந்த நிலையில் அவருக்கும் நான்காவது மகள் கிருத்திகாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது என கூறியுள்ளனர்.
மேலும் இதனால் மன உளைச்சல் அடைந்த கிருத்திகா முதலில் தூக்கில் தொங்கியுள்ளார்.மகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த லலித் பிரகாஷ் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை! விசாரணையில் வெளிவந்த பதறவைக்கும் அதிர்ச்சி காரணம்.!
English Summary
father and son suide at same time