காஷ்மீரில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரபல நடிகர் நிதிஉதவி! அவரின் உருக்கமான பதிவு! - Seithipunal
Seithipunal



காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 44 பேர் பலியாகினர்.

தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் தனி விமானங்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள். இதில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த 28 வயது நிரம்பிய சுப்ரமணியன், மற்றும் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்றும் மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இதனை தொடர்ந்து உயிரிழந்த துணை இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் தேவர் கொண்டா அரசின் "bravehearts "திட்டத்திற்கு தன்னால் முடிந்த உதவியை நிதி உதவி செய்துள்ளார். மேலும் மற்றவர்களும் இதே போல் முன்வந்து வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.



 

விஜய் தேவர் கொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில், "ராணுவ வீரர்கள் நமது குடும்பத்தை பாதுகாத்து வருகின்றனர். நாம் கண்டிப்பாக அவர்களது குடும்பங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்"என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actot donates for killed army people's family


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->