பேஸ்புக் காதல் திருமண வாழ்க்கை.! 3 மாத கைக்குழந்தை முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்.!! தீயில் துடிதுடிக்க பலியான குழந்தை.!!
face book love and marriage life will end murder in Bangalore
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூர் ராம் நகர் பகுதியை சார்ந்தவர் ராஜ். இவருக்கு முகநூல் மூலமாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சுஷ்மா என்ற பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நட்பு வட்டாரத்தில் பழகி வந்த நிலையில்., இவர்களின் நட்பு காதலமாக மலர்ந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் தங்களின் காதலை பகிர்ந்துகொண்டு நேரம் பார்க்காமல் பேசி பழகி., தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
சுஷ்மாவின் நடவடிக்கையை கவனித்த பெற்றோர் அவரை எச்சரிக்கவே., இவர்களின் காதலை அறிந்த பெற்றோர்கள் கடுமையாக அவரை கண்டித்துள்ளனர். வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால்., வீட்டை விட்டு வெளியேறி ராஜுடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரத்தில்., எந்த நேரத்திலும் தொடர்ந்து அலைபேசியை உபயோகம் செய்த வண்ணம் சுஷ்மா இருந்து வந்துள்ளார். மேலும்., வீட்டில் எந்த விதமான பணியையும் செய்யாமல் தொடர்ந்து அலைபேசியை உபயோகம் செய்து வந்துள்ளார்.
இது குறித்து சுஷ்மாவின் கணவர் ராம் பல முறை தனது மனைவியை எச்சரித்தும் அதனை கேட்ட மறுத்துள்ளார். மேலும்., அவருக்கு மூன்று மாதங்கள் ஆன கைக்குழந்தை இருக்கும் பட்சத்தில்., குழந்தையை கூட கண்டுகொள்ளாமல் அலைபேசியில் மூழ்ங்கியிருந்துள்ளார்.
அவரது அலைபேசியில் ராம் தற்செயலாக சோதிக்கையில்., அவர் பலருடன் சாட்டிங் செய்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராம்., தனது மனைவியை தீம்பார்க்கிற்கு செல்லலாம் என்று அழைத்துள்ளார்.
அங்குள்ள தைலமரக்காட்டில் வாகனத்தை கொண்டு சென்று அங்கிருந்த கல்லை எடுத்து சுஷ்மாவை கொடூரமாக கொலை செய்த ராம்., தனது மகனையும் பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தனது மகள் மற்றும் பேரக்குழந்தை குறித்த தகவல் இல்லாததால் பதறிய சுஷ்மாவின் தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதே நேரத்தில்., தற்செயலாக தைலமரக்காட்டிற்கு சென்ற காவல் துறையினர் இவர்கள் இருவரின் கருகிய உடலை கண்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சம்பவமும் நடந்தது. இதனையடுத்து இது குறித்து சுஷ்மாவின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்ட போது., அவர் கணவர் ராம் மீது சந்தேகம் தெரிவிக்கவே., அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.
English Summary
face book love and marriage life will end murder in Bangalore