போட்டோ எடுக்க எடுக்க ஆற்றில் தவறி விழுந்த மணமக்கள் - வைரலாகி வரும் பகீர் காட்சி..!
exclusive-photo-suit-for-marriage
கேரளத்தில் கொஞ்சம் வித்தியாசமான முறையில் திருமண நிகழ்வுகளை புகைப்படம் எடுப்பார்கள். சமூக வலைதளங்களில் ஒரு ஜோடி கீழே நின்றிருக்க நண்பர் ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கிய படி புகைப்படம் எடுக்கும் கட்சிகள் சமீபத்தில் வைரலானது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் திருமணத்துக்கான பிரத்யேகமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது மணமக்கள் ஆற்றில் தவறி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த பகுதியில் திருமணத்துக்கு புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள் தங்கள் தனித் தன்மையைக் காட்ட மணமக்களை வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் புது மணமக்களான திஜின் – சில்பாவை பம்பை நதிக்கு அழைத்துச் சென்ற புகைப்படக் கலைஞர் தோணி ஒன்றில் அமர வைத்து இலை ஒன்றை அவர்கள் தலைக்கு மேல் குடை போல் பிடித்துக் கொள்ளச் செய்துள்ளனர்.
பின்னர் காதல் உணர்வுடன் புகைப்படம் எடுக்க முயன்றார். ஆனால் தோணி நிலை தடுமாறியதையடுத்து மணமக்கள் இருவரும் ஆற்றில் விழுந்தனர்.
அங்கிருந்தவர்களால் வீடியோ பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்ததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
English Summary
exclusive-photo-suit-for-marriage