தைலாபுரம் மேடையில் வைத்து தொண்டர்களுக்கு கட்டளை இட்ட எடப்பாடி!! ஓ இதுதான் விஷயமா?!
edappadi speech in thailapuram
பாமக அதிமுக கூட்டணியை அடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
பின்னர் விருந்து முடிந்த பின்னர், அங்குள்ள மேடையில் அவர் அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகளுடன் பேசியுள்ளார். அதில், " பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், அதிமுக, பாமக, பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரசை தொடர்ந்து மேலும்,சில கட்சிகள் நம்முடன் இணைய இருக்கிறது.
ஜெயலலிதா இருக்கும் போது, எப்படி களப்பணி செய்தோமோ அப்படியே இப்பொழுதும் செய்ய வேண்டும். அதுபோல தொகுதிகளில் நம் கட்சி நின்றாலும், நமது கூட்டணி கட்சி நின்றாலும் இரவு, பகல் அயராது உழைத்து அவர்களுக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அவ்வாறு வெற்றி பெற்றால் தான், பல திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து, நாம் மக்களுக்கு பெற்று தர முடியும். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தான் நாம் நாடாளுமன்றம் நமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், நமது வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்து எதிர்கட்சிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்" என கூறியுள்ளார்.
English Summary
edappadi speech in thailapuram