விடிந்தால் திருமணம்! விடியும் முன் மகளை கொன்ற தந்தை! - Seithipunal
Seithipunal


கேரள  மலப்புரம் அருகே பூவாதி கண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது  மகள் ஆதிரா (வயது 22). ஆதிராவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு காதலாக மாறியது. 

ஒப்புக்கொண்டார்

ஆதிராவும், அவரது காதலரும் வேறுவேறு  சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆதிராவின் பெற்றோர் இதனை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஆதிரா உறுதியாக இருந்ததால் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. ஆதிரா மேஜர் என்பதால் போலீசார் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனாலும் ராஜன் இதனை ஏற்காமல் மகளிடம் சண்டை செய்து வந்தார்.

இந்தநிலையில்  ஆதிராவும், அவரது காதலரும் இன்று திருமணம் செய்ய திட்டமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளில் ஆதிரா பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். இதனால்  ஆதிராவின் தந்தை ராஜன் ஆத்திரம் அடைந்தார்.  வீட்டில் இருந்த ஆதிராவை, ராஜன் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஆதிரா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார், மருத்துவமனை தூக்கி சென்று பார்த்தால் டாக்டர்கள் ஆதிரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

jail hand lock க்கான பட முடிவு

மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர். ராஜனுக்கு ஆதிரா தவிர மேலும் 2 மகள்கள் உள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

early morning marriage but before night killed by her father


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->