பள்ளிக்கு பேருந்தில் சென்ற போது நேர்ந்த சோகம்.! மலையில் தலைகுப்பற கவிழ்ந்த கோரம்.!! 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நடுங்கி பரிதாப பலி.!!
DELHI SCHOOL BUS ACCIDENT., 6 STUDENTS DIED
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிர்மார் மாவட்டத்தில் இருக்கும் சங்ரா நகரில் இருக்கும் மாணவர்கள் அங்குள்ள தனியார் பள்ளிக்கு பள்ளி பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில் தினமும் பள்ளிக்கு பேருந்தில் சென்று விட்டு மீண்டும் மாலையில் பேருந்தின் மூலமாக இல்லத்திற்கு திரும்புவார்கள்.
அந்த வகையில் இன்று காலையில் மாணவர்களை பள்ளிக்கு ஏற்றி கொண்டு பயணம் செய்த பேருந்தானது அங்குள்ள மலை பாதையில் தனது பயணத்தை தொடர்ந்தது.
அந்த நேரத்தில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது மலை பாதையில் தாறுமாறாக ஓடி., அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் அனைவரும் உயிருக்கு போராடி அலறித்துடித்தனர். இவர்களை அபயத்தை கண்ட சக வாகன ஓட்டிகள் உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும்., மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உயிருக்கு போராடிய 12 மாணவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்., மேலும்., இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் உட்பட 7 பேரின் உடலை மீட்டனர்.
படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் சேதம் அதிகரிக்கலாம் என்று அச்சப்படப்படுகிறது. மேலும்., பள்ளி மாணவர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளாகி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
DELHI SCHOOL BUS ACCIDENT., 6 STUDENTS DIED