ஓரினசேர்க்கை உறவுக்காக .,பெற்ற மகளே தாயை அடித்துக் கொன்ற கொடூரம்..! - Seithipunal
Seithipunal


காஸியாபாத்தில் ஆசிரியையுடனான  ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, கம்பியால் அவரது மகளே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில்  கவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி புஷ்பா தேவி. இவர்களுக்கு ராஷ்மி ராணா என்ற 21 வயது கல்லூரி செல்லும் மகள் உள்ளார். 
ராஷ்மிக்கு தனது  கல்லூரி ஆசிரியையான  நிஷா என்பவருடன் ஓரினச் சேர்க்கை உறவில்  ஈடுபட்டு வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு  ராஷ்மியின் தாயாருக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.அதிர்ச்சியடைந்த தாய் புஷ்பா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் புஷ்பாவை இரும்புக் கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர். இதில்,காயமடைந்த புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். தாயைக் கொலை செய்த ராஷ்மி, நிஷாவுடன் தலைமறைவானார். 

                         

இந்தக் கொலை தொடர்பாக சதீஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, காஸியாபாத் ரயில் நிலையத்தில் ராஷ்மியையும், நிஷாவையும் போலீசார் கைது செய்தனர். 

போலீசாரின் விசாரணையில் இருவரும், புஷ்பாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். ஓரினச்சேர்க்கை உறவுக்காக மகளே பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter kills mother for the homosexual relationship.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->