மாதம் ரூ.500 மட்டும் சம்பாதிக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் : ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
மாதம் ரூ.500 மட்டும் சம்பாதிக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள்
குஜராத்தில் 4 கவுன்சிலர்கள் மாதம் ரூ.500 மட்டுமே சம்பாதிக்கிறார்கள் என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ராவிடி பகுதியை சேர்ந்த சிசோடியா என்பவர் ஆர்டிஐ மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விபரத்தை ஆமதாபாத் மாநகராட்சியிடம் கேட்டுள்ளார்.
அதில் கவுன்சிலர்கள் சிலரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் சபர்மதி, குபேர் நகர், சைஜ்பூர் போகா மற்றும் தனிலிம்டா வார்டுகளின் கவுன்சிலர்கள் கனு தாக்கூர், தாராபென் படேல், கோவிந்த் பார்மர் மற்றும் ரஹிம் சும்ரா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் மாதம் 250 முதல் 500 ரூபாய் வரை சபம்பாதிப்பவர்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், தங்களுக்கு தெரியாமல் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான எந்த சலுகைகளையும் அனுபவித்ததில்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால், இவர்களின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள சிசோடியா, கவுன்சிலர்கள் விவரம் எதுவும் கொடுக்காமல் எப்படி அவர்களின் பெயர் இடம் பெற்றிருக்க முடியும்? அதனால் இதுவரை அரசின் சலுகைகளை அனுபவித்துள்ளார்களா என்பதை விசாரிக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
English Summary
Gujarat Councilors in got rs 500 per month salary