20 இடங்களுக்கு மேல் வெற்றி நிச்சயம்: சித்தராமையா உறுதி.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற அம்மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

கடந்த முறை பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 

இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. இந்த முறை பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. 

இதுகுறித்து சித்தராமையா தெரிவித்திருப்பதாவது, கர்நாடகா மாநிலத்தில் வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளை குறித்து எனக்கு தெரியாது. 

கர்நாடக மாநிலத்தை பொருத்தவரை நாங்கள் 20 தொகுதிக்குகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். தற்போது வழங்கப்பட்டு வரும் உத்திரவாத திட்டங்கள் அடுத்த முறை ஆட்சி அமைத்தால் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது. 

உத்திரவாத திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக வருகின்ற 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Siddaramaiah says congress win 20 seats


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->