தனது முதலாளியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, உற்சாகமாக கார் டிரைவர் செய்த அட்டூழியம், வெளியான போலீசாரையே திணறடித்த வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிக்க கார் டிரைவரே தனது முதலாளியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 புதுவை நெல்லித்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் வக்கீலாக பணியாற்றினார். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஹேமலதா மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் மற்றும் ஹேமலதா இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். மேலும் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் அனைத்தும் திருடப்பட்டது.

                 

இவ்வாறு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள போலீசார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து இருந்தனர். பின்னர் அவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பாலகிருஷ்ணனின் கார் டிரைவரே இந்த கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து கார் டிரைவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: வக்கீல் மிகவும் வசதியானவர். மேலும் அவர் அவரது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.  இந்நிலையில் அவரது பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதற்காக நான் எனது நண்பனுடன் சேர்ந்து அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை அவர்களை கொலை செய்தோம். 

மேலும் கஷ்டப்பட்டு கொலை செய்ததால் மிகவும் களைப்பாக இருந்தது. பின்னர் அடுப்பறைக்கு சென்று இருவரும் டீ போட்டு குடித்து விட்டு அங்கேயே சிறுநீர் கழித்து விட்டு தப்பித்து ஓடி விட்டோம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

 பின்னர் அந்த கார் டிரைவர் மற்றும் அவரது நண்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car driver kooled owner for money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->