காதலி சொன்ன ஒத்த வார்த்தை, கழுத்தை அறுத்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞன்.!
காதலி சொன்ன ஒத்த வார்த்தை, கழுத்தை அறுத்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞன்.!
உத்திரபிரதேச மாநிலம் அனில் விஹார் பகுதியில் வசித்து வருபவர் ரவி யாதவ். 22 வயது நிறைந்த இவர், நொய்டா பகுதியில் உள்ள உணவகத்தில் டெலிவரி பையனாக இருந்துவந்தார்.
ஆனால் கடந்த ஒரு மாதமாக அந்த வேலையையும் விட்டுவிட்டு , வேலையில்லாமல் ரவி இருந்ததை வந்துள்ளார், இந்நிலையில் அவர் நேற்று காலை தன்னுடைய காதலியை சந்திக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் ரவியின் காதலி தான் புதிதாக ஒரு வேலையில் சேர்ந்துள்ளதை கூறியுள்ளார். மேலும் அவன் அவளை வேலைக்கு செல்லவேண்டாம் என கூறி கூறியுள்ளார்,. அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது.
இதனால் கோபமடைந்த ரவி வீடு திரும்பியுள்ளார், மேலும் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே தன்னுடைய கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு, ரத்தம் வழிந்தபடியே வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் தூங்கிகொண்டிருந்த தன்னுடைய தந்தை ராஜூவை எழுப்பி, "நான் சென்று வருகிறேன் அப்பா" என கூறிவிட்டு மயக்கமடைந்து விழுந்தார்.
கழுத்தில் வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட மகன் மயங்கிவிழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜு, உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் ரவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் விவரமறிந்து அவரது காதலி பதறியபடி ரவியின் வீட்டிற்கு ஓடி வந்து நடந்த அனைத்தையும் ரவியின் தந்தையிடம் கூறியுள்ளார்.
இவ்வாறு காதலி வேலைக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் காதலன், கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boy commits suicide by his lover