காதல் சொட்ட சொட்ட , கல்யாண புகைப்படம் எடுத்த புதுமண ஜோடிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! வைரலாகும் வீடியோ!!
boat fallen when taking marriage album
தற்காலத்தில் திருமணங்களில் புகைப்படம் எடுப்பது என்பது திரைப்படம் எடுப்பது போன்று பெரிய அளவில், மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் புகைப்பட கலைஞர்கள் தங்களது தனித் திறமைகளை காட்ட மணமக்களை பல பல வித்தியாசமான போஸ்களில் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் டிஜின், சில்பா என்ற ஜோடிக்கு மே மாதம் திருமணம் நடைபெறவுள்ளநிலையில் அவர்கள் கல்யாண ஆல்பத்திற்காக முன்னராக புகைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் அதற்காக அவர்கள் பம்பை நதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு கேமராமேன் ஆழம் குறைவான பகுதியில் தம்பதிகளை படகில் அமர்த்திக்கொண்டு, ஒரு வாழை இலையை மேலே பிடித்தவாறு இருவரையும் ஒருவருக்கொருவர் பார்த்து, வித்தியாசமாக போஸ் கொடுக்க செய்துள்ளனர்.
மேலும் படகில் பக்கவாட்டில் நின்று சிலர் தண்ணீர் தெளித்துள்ளனர் இதனை கேமராமேன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென படகு நிலை தடுமாறி குப்புற கவிழ்ந்தது.
இதில் மணமக்கள் இருவரும் ஆற்றில் விழுந்தனர். ஆனால் ஆழம் குறைவான பகுதி என்பதால் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
English Summary
boat fallen when taking marriage album