தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராயை போல் மாறலாம்.. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


தினமும் மீன் சாப்பிட்டால் நடிகை ஐஸ்வர்யா ராயின் கண்களைப் போல நீங்களும் பெறலாம் என்று பாஜக அமைச்சர் ஒருவர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சரான விஜயகுமார் காவித் என்பவர் அம்மாநில பழங்குடியின அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நந்துர்பார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து பேசிய அவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதன்படி தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் நடிகை ஐஸ்வர்யா ராயின் கண்களைப் போல நீங்களும் உங்களுடைய கண்களை அழகாக பெறலாம் என்று கூறியுள்ளார். மேலும் தினமும் மீன் சாப்பிடுவதால் மிருதுவான சருமம் உருவாகி கண்கள் அழகாகும் என கூறியுள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா ராய் பெங்களூரு அருகே கடலோர நகரத்தில் வசித்து வந்தார். அவர் மீன் சாப்பிடுவது வழக்கம். அதனால் தான் அவள் கண்களும், தோலும் அழகாக இருக்கும். 

இவ்வாறு செய்தால் யாரை வேண்டுமானாலும் நம்ப வைக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தற்போது இவருடைய சர்ச்சை கருத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP minister controversy speech about ishwarya Rai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->