சூட்கேசுடன் காவல் நிலையத்திற்கு வந்த பெண்..! அதிர்ந்துபோன போலீசார்..! நடந்தது என்ன.?
Bengaluru woman kills mother stuffs body in suitcase takes it to police station
தாயை கொன்று உடலை சூட்கேஸில் அடைத்து காவல் நிலையத்திற்கு மகள் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் 39 வயதான பெண். பிசியோதெரபிஸ்டான இவர் பெங்களூருவில் உள்ள மைக்கோ லேஅவுட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிலேகஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய், மாமியார், கணவர் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று 39 வயது பெண்ணுக்கும், அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் தாயின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்பு தாயின் உடலை சூட்கேசில் அடைத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று போலீசாரிடம் சரணடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தினசரி சண்டை சச்சரவுகளால் தாயைக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது அப்ப பெண்ணின் கணவர் வீட்டில் இல்லை என்றும், மாமியாரும் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்தாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இறந்தவர் பிவா பால் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மகள் செனாலி சென் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தாயை கொலை செய்த மகளை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Bengaluru woman kills mother stuffs body in suitcase takes it to police station