குழந்தைக்கு எமனாக வந்த சாக்லேட் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பாட்டியாலா நகரில் வாங்கிய சாக்லேட்டை சாப்பிட்டுள்ளது. ஆனால், சிறிது நேரத்திலேயே ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது குழந்தையின் குடும்பத்தினர் காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தை நோய்வாய் பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை இறந்ததை தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் பாட்டியாலா நகரில் உள்ள கடைக்கு சென்று சாக்லேட் மாதிரிகளை ஆய்விற்காக கைப்பற்றி அனுப்பியதுடன் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby died in punjab after eat choclate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->