பரவும் நிபா வைரஸால் தொடரும் உயிரிழப்பு.,அச்சத்தின் உச்சத்தில் மக்கள் .,உயிரை காக்க வந்ததே தீர்வு ..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதனால 10-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 மேலும் இந்த நிபா வைரஸ் வவ்வால்கள் மூலமே பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிய வந்துள்ளது. 

          

அதுமட்டுமின்றி தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் இருப்பதால்,தமிழகத்திற்கு  நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பாதிக்கப்படும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை காப்பாற்ற இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கமுடியாமல் தவித்து வருகின்றனர். 

   

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குதிரைகள் மூலம் பரவிய ஹென்றா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்தான எம் 102.4  மருந்தை நிபாவிற்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது  என கண்டுபிடிக்கப்பட்டு  உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி இந்த மருந்தை பெற ஆஸ்திரேலியா உதவியை இந்திய அரசு நாடியது. 

மேலும் தற்போது நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருந்து கேரளா வந்து உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் வைரஸ் பாதிப்புக்கு தேவையான உதவியை செய்யுமாறு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அரசு உதவியை கோரியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

australia distributes medicine to solve the problem from nipah virus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->