எனக்கு அப்படியொரு ஆசை எப்பொழுதுமே இருந்தது இல்லை .! பிரபல நடிகருடன், மோடி சுவாரஷ்ய நேர்காணல்!!
akshaykumar interview with modi
பிரதமர் மோடியுடன் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் இன்று காலை நேர்காணல் நடத்தினார். அப்பொழுது அரசியல், தேர்தல் சம்பந்தம் இல்லாத மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை, தாயார் உள்ளிட்ட பல கேள்விகளை அக்ஷய் குமார் மோடியிடம் கேட்டார்.அதற்கு மோடி மிகவும் சாதாரணமாக சுவாரஷ்யமாக பதிலளித்தார்.
இந்த நேர்காணலில் போது மோடி “நான் பிரதமராக வேண்டும் என்று என்றுமே அசைத்தட்டு இல்லை. சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்துள்ளேன்” என்று மோடி கூறினார்.
மேலும் கோபம் என்பது எதிர்மறையான தவறான எண்ணங்களை பரப்புகிறது. மேலும் நான் அலுவலக உதவியாளராக இருந்தது முதல் இன்று பிரதமராக இருக்கும் வரை கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்ளவில்லை. எனக்கு கோபம் வரும் அதை நான் ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.என்னிடம் பணிபுரியும் யாரிடமும் கூட நான் கோபத்தை காட்டியதே இல்லை.
எம்.எல்.ஏ ஆகும் முன் வரை தனக்கு வங்கிக்கணக்கு இல்லை என்றும், அரசியல் களத்தில் எதிராக இருந்தாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வருடம்தோறும் தனக்கு குர்தா மற்றும் இனிப்புகள் அனுப்புவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
akshaykumar interview with modi