சர்வதேச மகளிர் தினம்! பெண்களை கௌரவிப்பதற்காக ஏர் இந்தியா எடுத்துள்ள அசத்தலான நடவடிக்கை! குவியும் வாழ்த்துக்கள்! - Seithipunal
Seithipunal


இன்று மார்ச் 8 உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள வீர மற்றும் நவீன மங்கையருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெண்களை கௌரவிக்கும் விதமாக இன்று ஏர் இந்தியா விமானம் முழுவதும் பெண்களால் இயக்கப்பட உள்ளது. ஏர் இந்தியா விமானம் சேவைமூலம் நாட்டில் 12 சர்வதேச விமானங்களும் 40க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் இயங்கி வருகிறது. இந்த விமானங்கள் அனைத்திலும் இன்று விமானி, துணை விமானி மற்றும் பணிப்பெண்கள் என அனைத்து பிரிவிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

மேலும் விமானங்களில் தொழில்நுட்ப பிரிவிலும் இஞ்சினியர்கள், டெக்னீசியன்கள் உதவியாளர்கள் அவசர சேவைப் பிரிவு மருத்துவர்கள் என அனைத்திலும் பெண்களே ஈடுபட உள்ளனர்.

டெல்லியிலிருந்து சிட்னி,ரோம், லண்டன், பாரிஸ்,வாஷிங்டன், சிகாகோ வழித்தடங்களில் செல்லும் விமானங்களையும், மும்பையிலிருந்து லண்டன் ஷங்காய், நியூயார்க் வழித்தடங்களில் செல்லும் விமானங்களையும் இந்திய பெண்கள் இயக்க உள்ளனர்.

இவ்வாறு பெண்களை போற்றும் விதமாகவும் பெருமைப்படுத்தும் விதமாகவும் ஏர் இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india celebrate worls women day


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->