மாமியார் கொடுமையால்., கணவருக்கு கடிதம்.! குழந்தையை கொன்று தூக்கில் தொங்கிய தாய்.!!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புனேவில் உள்ள காவல்அதிகாரிகளின் குடியிருப்பில் வசித்து வருபவர் அமித் காம்ப்ளே., இவர் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஜான்வி (22).

இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., இரண்டு வயதுடைய மகன் ஷிவான்ஸ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில்., நேற்று அமித் பணிக்கு சென்றுவிட்ட நிலையில்., வீட்டில் இருந்த ஜான்வி தனது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ஜான்வி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அக்கம் பக்கத்தினர்., உடனடியாக விஷயம் குறித்து அவரது கணவருக்கும்., காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இவர்களின் பிரேதத்தை கைப்பற்றி., பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., பெற்ற குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்த விசாரணையில் காவல் துறையினர் மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., அவர் கணவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவந்தது. அந்த கடிதத்தில்., "அமித்... நெனெகல் என்னை அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்., ஆனால் தங்களின் தாயார் சுஜாதாவால் நான் இந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்., அவர் என்னை தினமும் கொடுமை படுத்துவதன் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று" குறிப்பிட்டிருந்தார். 

இதனை ஆதாரமாக கொண்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏறப்டுத்தியுள்ளது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A MOTHER KILLED HER BABY AND ATTEMPT SUICIDE


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->