கொடூரனை போல நண்பனை கொலை செய்து., துண்டு துண்டாக நறுக்கி சாக்கடையில் போட்ட கொடூரம்.!! காரணத்தை கேட்டு உறைந்து போன காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டத்தில் இருக்கும் விரார் மேற்கு குடியிருப்பு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது., இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் விலங்குகள் ஏதேனும் இறந்திருக்கலாம் என்று சந்தேகித்து அது குறித்து ஏதும் ஆய்வு செய்யாமல் விட்டுவிட்டனர். 

அதே போன்று., கட்டிடத்தின் கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து., விஷயம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் மாநகராட்சி தொழிலாளர்கள் அடைப்பை சரி செய்வதற்காக கழிவு நீர் தொட்டியின் மூடியை திறந்தனர். 

அந்த சமயத்தில் நீரின் மேல் புறம் மனித விரல்களில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள்., சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விரல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும்., அந்த தொட்டியில் இருந்து மனித பாகங்கள் சிறு சிறு துண்டுகளாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து., உடல் உறுப்புகளை கைப்பற்றிய காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.   

மொத்தமாக சுமார் 150 துண்டுகளாகவும்., 40 கிலோ அளவிலான எடைக்கு மேலாக இருந்த உறுப்புகளை கைப்பற்றினர். அந்த பாகங்கள் அனைத்தையும் கலினாவில் உள்ள தடவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்., அதே நேரத்தில் விசாரணையும் மேற்கொள்ள துவங்கினர். அந்த உடல் பாகங்கள் அனைத்தும் குடியிருப்பில் உள்ள 6 வது தளத்தில் இருக்கும் 602 ம் இல்லத்தில் இருந்து போடப்பட்டது என்று காண்ட்ராய்ந்த காவல் துறையினர்., அந்த இல்லத்தில் வாடகைக்கு குடியிருக்கும் பிண்டு சர்மா (42) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., பிண்டு சர்மாவின் நண்பரான கணேஷ் கொலட்கர் (வயது 58)., தானே மாவட்டத்தில் உள்ள மீரா சாலையில் வசித்து அங்கேயே அச்சகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அச்சகம் நடத்தி வந்த இவர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாக சர்மாவிடம் ரூ.1 இலட்சத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் பெற்ற கடன் தொகையில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை மட்டும் வழங்கியுள்ளார். மீதமுள்ள ரூ.60 ஆயிரத்தை வழங்காததால்., தொடர்ந்து கணேஷுக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார். 

இந்நிலையில்., பணத்தை மீண்டும் வழங்காததால்., அதனை கண்டு கொள்ளாதது போல கணேஷிடம் கூறிவிட்டு., கடந்த 16 ம் தேதியன்று சர்மாவின் இல்லத்திற்கு அழைத்து சென்று., இருவருக்கும் இடையே பணத்தகராறை வளர்க்கவே, இவர்களுக்குள் முற்றிய ஆத்திரத்தில் கணேஷை பிடித்து தள்ளிவிட்டுள்ளார். இதன் காரணமாக தலையில் படுகாயமடைந்த நிலையில்., பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கணேஷ் உயிரிழந்துள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சர்மா செய்வதறியாது இல்லத்தை விட்டு வெளியேறிய இவர்., மறுநாள் காலையில் இல்லத்திற்கு மீண்டும் திரும்பி வாங்கி கொண்டு வந்த ஆக்சா பிளேடின் மூலமாக கணேஷின் உடலை துண்டு துண்டாக நறுக்கி கழிவறை கோப்பையில் போட்டு விட்டு தண்ணீரை ஊற்றியுள்ளார். அந்த நேரத்தில் பாதியளவு உடல் துண்டுகள் கீழிறங்கிய நிலையில்., மீதமிருந்த உடல் பாகங்கள் கழிவறையிலேயே அடைத்து கொண்டுள்ளது. இதனையடுத்து மீதமுள்ள பாகங்களை குப்பையை போல் பையில் வைத்து சாக்கடையில் போட்டுள்ளார்.  

இந்த விஷயத்தை காவல் துறையினரிடம் தனது வாக்கு மூலமாக சர்மா அளித்துள்ளார். இந்நிலையில்., கணேஷின் உடல் பாகங்கள் மட்டும் கிடைத்த நிலையில்., அவரது தலை பாகத்தை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்., தனி ஒரு நபரால் இத்தனை விஷயங்களை செய்ய முடியுமா? இதற்கு இவருடன் தொடர்பு யாரும் வைத்திருந்தனரா? என்பது குறித்த தொடர் தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி வாசிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a man killed by her friend in mumbai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->