11 வயதுடைய சிறுமியை கற்பழித்த கொடூரன்.! 264 மாதங்களுக்கு பின்னர் வந்த நீதி.!!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள நாசிக்கை பகுதியை சார்ந்தவர் மச்சீந்திரா (41)., இவர் அங்குள்ள பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். கடந்த 1996 ம் வருடம் டிசம்பர் மாதம் 1 ம் தேதியன்று இவரது மருந்தகத்திற்கு 11 வயதுடைய சிறுமி வருகைதந்தார். 

அந்த சமயத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மச்சீந்திரா., சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தை வீட்டிற்கு சென்ற சிறுமி கண்ணீருடன் தெரிவிக்கவே., இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு பெற்றோர் உள்ளானார்கள்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக அங்குள்ள கவலை நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள்., விசாரணையின் முடிவில் மச்சிந்திராவை விடுதலை செய்து தனது தீர்ப்பை தெரிவித்தது. இந்த தீர்ப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த மாநில அரசு தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்தது. 

கடந்த 22 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் மச்சிந்திரா மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் உறுதிசெய்யப்ட்டு., ஆயுள் தண்டனையும் ரூ.1 இலட்சம் அபராதமும் விதித்து தனது தீர்ப்பை வழங்கியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl rapped in Mumbai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->