ஓடும் லாரியிலிருந்து தூக்கி வீசப்பட்ட... வலியால் கதறிய ஆடுகள்... சொகுசு காரில் திருடிய கும்பல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் சொகுசு காரின் உதவியுடன் ஓடும் லாரியிலிருந்து கும்பல் ஒன்று ஆடு திருடும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இந்த சம்பவம் பார்ப்பதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சின்னார் பகுதியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு  லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பின்தொடர்ந்து வேகமாக துரத்தி வந்தது ஒரு சொகுசு கார்.

திடீரென அந்த சொகுசு காரிலிருந்து நபர் ஒருவர் லாரியில் ஏறி ஆடுகளை தூக்கி சாலையில் வீச ஆரம்பித்தார். இதனால் சாலையில் விழுந்த ஆடுகள்  வலியால் அலறி துடித்தன.

இந்த ஆடு திருடும் கும்பலானது சொகுசு காரீஇளை பயன்படுத்தி நூதன முறையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a gang came in a luxury car and steal the sheeps from a running lorry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->