மகளின் திருமண விருந்தை நிறுத்தி., அந்த பணத்தை தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு கொடுத்த தந்தை!!
A father stop marriage party for his daughter
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது.
இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 38 பேர் வீரமரணம் அடைந்தனர்.இத்தாக்குதலில் வீர மரணம் அடைந்த ரதன் தாக்கூரின் தந்தை தனது மற்றொரு மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன் என கண்ணீருடன் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, குஜராத்தை சேர்ந்த வைரவியாபாரி ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதன் பின் திருமண வரவேற்பு விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் தாக்குதலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த அவர் விருந்திற்கு செலவழிக்க இருந்த ரூ. 11 லட்சத்தை காஷ்மீரில் உயிரிழந்த CRPF வீரர்களின் குடும்பத்திற்கு வழஙகியுள்ளார்.
English Summary
A father stop marriage party for his daughter