திடீரென இடிந்த கட்டிடம்.! 3 பேர் பரிதாப பலி., 6 பேருக்கு மருத்துவமனையில் நேர்ந்த சோகங்கள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகாவ் மேற்கு பகுதியில் உள்ள மோதிலால் நகரில் பழைய வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் உள்ள இரண்டாவது தளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. 

இந்த சீரமைப்பு பணியில் தொழிலாளர்கள் காலை முதலாகவே ஈடுபட்டு வந்த நிலையில்., சுமார் 9.15 மணியளவில் திடீரென கட்டிடமானது இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் உயிருக்கு பரிதவிக்கும் நிலையில் அலறினர்.

இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்., உடனடியாக வெளியே வந்து பார்க்கும் போது பணியாளர்கள் உயிருக்கு போராடியதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் உடனடியாக இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 9 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட தயார் செய்திருந்த நிலையில்., இவர்களில் மூவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

மீதமுள்ள 6 பேருக்கும் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில்., தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a building suddenly collapse in accidentally


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->