குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் பசையை ஊற்றிய தாய்.! இறுதியில் நேர்ந்த சோகம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


நாம் வாழ்ந்து வரும் இந்த உலகை சுற்றி பல விதமான நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. சில நிகழ்வுகள் வியக்க வைப்பதாகவும்., சில நிகழ்வுகள் வருத்தப்பட வைப்பதாகவும்., சில நிகழ்வுகள் நகைசுவை வர்ணத்துடனும் இருக்கும். அந்த வகையில்., தற்போது நடைபெற்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. 

இந்த உலகத்தின் பல்வேறு மூலைகளில் உள்ள இடங்களில் பல இல்லங்களில் குழந்தைகள் உள்ளது. அவ்வாறு குழந்தைகள் என்ன செய்தலும் ரசித்து கொண்டு இருக்கும் பல பெற்றோர்கள்., குழந்தைகள் அழும் சமயத்தில் குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியாமல்., குழந்தைகளிடம் சத்தம் போட்டு அவர்களின் அழுகையை மேலும் தொடர்ச்சியாக்குவது வழக்கம். 

அந்த வகையில் அவர்கள் அழும் சமயத்தில் வாயில் பிளாஸ்திரியை ஒட்ட வைத்து விடுவேன் என்று தெரிவிப்பார்கள். இதனை கேட்டு பயந்த நாம் அழுகையை நிறுத்துவோம். சில இடங்களில் அது போன்ற துயர சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. அந்த வகையில்., குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு வாயில் பசை ஊற்றிய சம்பவமானது நடந்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் இருக்கும் சாப்ரா பகுதியை சார்ந்த பெண் ஒருவருக்கு குழந்தை உள்ளது. என்றும் இல்லாமல் சம்பவத்தன்று குழந்தை அதிக நேரம் அழுதுகொண்டே இருந்ததால்., கடும் ஆத்திரத்திற்கு உள்ளான பெண் குழந்தையின் வாயில் பசையை ஊற்றியுள்ளார். 

அன்றைய பணியை நிறைவு செய்து விட்டு வீட்டிற்கு வந்த கணவர் தனது குழந்தையை கவனித்துள்ளார். அந்த நேரத்தில்., குழந்தையின் வாயில் இருந்து வடியும் பசையை கவனித்து., குழந்தையின் வாயில் பிசுபிசு வென்று உள்ளது என்ன என்று அது குறித்து கேட்டுள்ளார். அதற்கு குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தது. அதனை தவிர்ப்பதற்கு வாயில் பசையை ஊற்றிவிட்டேன் என்று கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் மனைவியை சத்தமிட்டு., உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க துவங்கினர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a baby mouth is filled by gum due to deep crying activity done by mother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->