கோவில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் பரிதாப நிலையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


 கர்நாடக மாநிலம் மைசூருவில் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹானூர் தாலுகாவிலுள்ள சுல்வாடியில் மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது.
அதனையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த மக்கள், பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இந்நிலையில்  பிரசாதத்தை சாப்பிட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

 மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் கமகெரே, கொல்லீகல் மற்றும் மைசூருவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்தன. 

இதனை தொடர்ந்து பிரசாததில் விஷம் எதுவும் கலந்துள்ளதா என கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

மேலும் போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

80 people in serious condition at mysore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->