தறிகெட்டு ஓடி ஆற்றில் கவிழ்ந்த கார் - 4 பேர் பலி; 3 பேர் மாயம்.!
4 peoples died and three peoples missing accident in jammu kashmir
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் சோனாமார்க் பகுதியில் இருந்து கந்தர்பால் மாவட்டத்தின் காங்கன் பகுதியை நோக்கி வாடகை கார் ஒன்றில் ஒன்பது பேர் பயணம் செய்துள்ளனர். இந்தக் கார் ககன்கீர் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிந்த் ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பிற மீட்பு படையினருடன் சேர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், 4 பேர் உயிரிழந்த நிலையிலும், இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் மூன்று பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே போலீசார் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை கைது செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
4 peoples died and three peoples missing accident in jammu kashmir