தீபாவளியன்று பயங்கரம் : வெடிகொண்டு வீசி, அரிவாளால் வெட்டி 3 ரவுடிகள் படுகொலை..!
புதுவையில் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் 3 ரவுடிகள் படுகொலை
புதுவையில் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் 3 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் ஜெரால்டு(24), நாய்சேகர்(24), சதீஷ் (23), ரங்கராஜ் (25) ஆகியோருடன் மேலும் 5 பேர் நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் உள்ள இரும்பு பீரோ செய்யும் கம்பெனிக்குள் மது குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 10-க்கும் மேற்பட்ட கும்பல் கம்பெனியை சுற்றி வளைத்து வெடிகுண்டுகளை வீசியது. இதில், மது குடித்துக் கொண்டிருந்தவர்களில் ஜெரால்டு குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றவர்கள் ஓட முயற்சித்தவர்களை கொலை கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியது. அதில், நாய்சேகர், சதீஷ் உயிரிழந்தனர். ரங்கராஜுக்கு வெட்டு விழுந்தது. மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொலை கும்பலும் அங்கிருந்து தப்பி சென்றது.
தகவலறிந்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸார், காயமடைந்த ரங்கராஜை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உயிரிழந்த மூவரின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டும சுரேஷ் என்பவரை நாய்சேகர் மற்றும் அவரது கூட்டாளிகள் படுகொலை செய்தனர். இதற்கு பழிவாங்குவதற்காக இந்த கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளியன்று 3 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Three rowdies murdered in Pondichery