ஜம்மு காஷ்மீரில் அதிரடி என்கவுண்டர்.! 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சல் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து இந்திய ராணுவத்தினர்  ஜம்மு காஷ்மீர் காவல்துறையினருடன் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்பொழுது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த பதிலடி தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். 

மேலும் அப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக கடந்த இரண்டாம் தேதி ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பல்வேறு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Terrorists Killed Near Line Of Control In Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->