அக்னி பத் திட்டம்.. 2.50 லட்சம் பேர் விண்ணப்பம்.!!
2 lakh people have apply for air force the agni path
இந்திய ராணுவத்தில் நான்காண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள் வெடித்தது. பல்வேறு பகுதிகளில் ரயில்கள், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது.
ஆனாலும் இந்த திட்டத்தை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளது. விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பம் தொடங்கிய முதல் நாளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. வருகின்ற ஐந்தாம் தேதி வரை முன்பதிவுக்கான கால அவகாசம் இருப்பதால் மேலும், அதிக இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள் என விமானப்படை தெரிவித்துள்ளது.
English Summary
2 lakh people have apply for air force the agni path