முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு அவருடைய நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி 20 கோடி தராவிட்டால் உங்களை கொன்று விடுவோம். இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கி சூடும் வீரர் எங்களிடம் உள்ளார்கள் என மிரட்டல் விடுத்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 28ஆம் தேதி 20 கோடி வேண்டாம் 200 கோடி ரூபாய் வேண்டும் என மீண்டும் மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் அந்த மர்ம நபர். மீண்டும் 3வது முறையாக 200 கோடி ரூபாய் வேண்டாம் 400 கோடி ரூபாய் வேண்டும் என மிரட்டல் விட்டுத்திருந்தார். இந்த மின்னஞ்சல்களுக்கு முகேஷ் அம்பானியின் தரப்பிலிருந்து பதில் அளிக்கவில்லை.

மேலும் முகேஷ் அம்பானியின் இல்லம், அவர் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார் மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரை தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை வரும் நவம்பர் 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 years youth arrested for death threats to mukesh ambani


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->