குடும்ப சண்டையினுள்..! 1000 கோடி ரூபாய் சொத்தை.. சாமியார் செய்த வேலை..!! அதிர்ச்சியில் உறைந்த மனைவி மகள்..!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில், பிரபல ஆன்மீக சொற்பொழிவாளரும், சாமியாருமான, பையு மஹாராஜ் (வயது 50), சில தினங்களுக்கு முன்பு, துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்குத் திருமணமாகி, இவரது முதல் மனைவியின் மகள் இவருடன் தான் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு, பையு மஹாராஜ் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்டார்.

இவரது இரண்டாவது மனைவிக்கும், முதல் மனைவியின் மகளுக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான, பையு மஹாராஜ், அவர்களை சமாதானப் படுத்த முயன்றார்.

ஆனால், அந்த இரண்டு பெண்களுக்கிடையே நடந்த சண்டையால் நிம்மதி இழந்தார். பின், அந்த வருத்தத்துடனே, துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக, தனது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தையும், தனது உதவியாளர் வினாயக்கிடம் ஒப்படைக்க வேண்டும், என்று எழுதி வைத்து விட்டார்.

இதனால், அந்த சாமியாருடைய சொத்துக்கள், அவரது இரண்டு மனைவி, மகளுக்குச் சேராமல், அவரது உதவியாளருக்குச் சேரப் போகிறது. இதனால், இந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 crore property owner suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->