மக்களோடு மக்களாக இருந்த தீவிரவாதிகள் கைது!
மக்களோடு மக்களாக இருந்த தீவிரவாதிகள் கைது!
ஜம்மு காஷ்மீரில் தொடந்து நடைபெறும் தீவிரவாதிகளில் தாக்குதலுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சிலர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்தி துப்பாக்கி சூட்டின் போது, சில மர்ம நபர்கள் பாதுகாப்புப் படையினருக்கு இடையூறு செய்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் டிரால் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய 10 பேர் நேற்று பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்துள்ளான்.
இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் கூறியபோது, மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு இவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று கூறினார்.
English Summary
10 terrorism arrested in kashmir police