மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்.! இந்த பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.!!
when girls attend this type of problem you will consult doctor to solve breast cancer
இன்றுள்ள காலகட்டத்தில் பல்வேறு விதமான பல சூழ்நிலைகளில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவ்வாறு வாழ்ந்து வரும் நாம்., நமது உடலுக்கு தேவையான மற்றும் சத்துக்களை வழங்க கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடாமல் இருந்து வருகிறோம்.
இந்த காரணத்தால் நமது உடலில் இருக்கும் சத்துக்கள் குறைந்து நமது உடல் நலமானது பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் இன்றுள்ள காலத்தில் பணிகளுக்கு சென்று வருகின்றனர்., அவ்வாறு பணிகளுக்கு செல்லும் பெண்கள் சில சூழ்நிலைகள் காரணமாக ஒரு வேலை உணவுகளை தவிர்த்து வருகின்றனர்.
இந்த ஒரு வேலை உணவை தவிர்க்கும் பெண்கள்., பசியெடுக்கும் சமயத்தில் பழச்சாறுகள் மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடல் நலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக மார்பக புற்றுநோய்யானது இருக்கிறது.
பெரும்பாலும் இப்போதுள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மார்பக புற்றுநோய் இருப்பதால்., மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை கூட மார்பக புற்றுநோயா என்று சந்தேகிக்கின்றனர். இந்த வலியானது மார்பக புற்றுநோயின் தற்காலிக வலி அல்லது பிற வலிகளாக இருக்கலாம்.
மார்பக புற்றுநோய் இருப்பதற்கு சில அறிகுறிகள் உள்ளது., மார்பகத்தில் கட்டிகள் மற்றும் அக்குள் பகுதிகளில் வீக்கம் இருக்கும் பட்சத்தில் அது மார்பக புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது., மார்பகத்தின் சராசரி அமைப்பில் ஏற்படும் மாற்றம்., மார்பகத்தின் காம்பு பகுதிகளில் இருந்து திடீரென வழியும் திரவம் என்று உள்ளது.
இதுமட்டுமல்லாது மார்பக காம்புகள் திடீரென உள்ளிழுத்து கொள்ளுதல்., மார்பக தோலில் ஏற்படும் சுருக்கம் மற்றும் புள்ளிகள்., மார்பகத்தின் வீக்கம்., நிறம் மாறுதல்., சிவப்பாக தோன்றுதல் என்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. இந்த புற்றுநோயை அதன் துவக்கத்தில் கண்டறிந்தால் எளிய முறையில் குணப்படுத்த இயலும்.
English Summary
when girls attend this type of problem you will consult doctor to solve breast cancer