மக்கள் இப்படி மாறிட்டாங்களே! மீண்டும் திரும்பி வாங்க! துணை குடியரசு தலைவரின் வேண்டுகோள்!
மக்கள் இப்படி மாறிட்டாங்களே! மீண்டும் திரும்பி வாங்க! துணை குடியரசு தலைவரின் வேண்டுகோள்!
கண் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கை குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்து சிறந்த மருத்துவர்களுக்கான விருதினை வழங்கினார்.
விழாவில் பேசிய வெங்கய்யா நாயுடு, நகர்புற குழந்தைகளிடம் பார்வை குறைபாடு காணப்பட்டது. ஆனால் தற்போது கிராம புறங்களிலும் இந்த குறைபாடு அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.
மக்களிடம் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை வந்ததே இது மாதிரியான குறைபாடுகளுக்கு காரணம் என்றும் நம்முடைய மக்கள் மீண்டும் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெய்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாட்டில் நோய்களின் எண்னிக்கை அதிகரித்தே வருவதால் துணை குடியரசு தலைவர் வரை மீண்டும் பாரம்பரியத்திற்கு மாற வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.
English Summary
vice president of india feels very bad of peoples lifestyle