கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக பெண்கள் இந்த வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.!!
pregnant ladies should avoid this type of food
கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் அந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உண்ணும் உணவுகள்., செய்யும் வேலைகள் மற்றும் பிற செயல்களில் கவனமாக இருப்பதே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்ல வழிவகுக்கும்.
இந்த சமயத்தில் உண்ணும் உணவுகள் அனைத்தும் குழந்தைகளுக்கு செல்லும். அதுமட்டுமல்லாது., சில வகையான உணவு பொருட்களை உட்கொள்வதால் கருச்சிதைவு., குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த வகையில்., கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவு வகைகளை பற்றி இனி காண்போம்.
இந்த காலத்தில் கற்றாழையை எடுத்து கொண்டால் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு மற்றும் கருச்சிதைவு போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாது பொட்டாசிய குறைபாடு., இதய கோளாறு மற்றும் தசை பலவீனம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
உணவில் போன்று சேர்ந்து கொள்வதால் கருப்பையில் சுருக்கம் ஏற்பட்டு குறை பிரசவம் மற்றும் தாய் சேய்க்கும் பாதிப்பு குறித்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாது., கர்ப்பிணிகளுக்கு வலி மற்றும் வயிற்று குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நார்த்தங்காய் சம்பவந்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய செயல்பாட்டு பிரச்சனை., பக்கவாதம்., குழந்தைகளின் நரம்பியல் பிரச்சனைகள் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். மேலும்., குழந்தைகளின் உறுப்புக்கள் வளர்ச்சியிலும் தடையை ஏற்படுத்தும். அதிகளவு தேநீர் மற்றும் கொட்டை வடியிலை நீர் பொருட்களை அருந்தி வந்தால் கருச்சிதைவு., குழந்தைகளின் எடை குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
English Summary
pregnant ladies should avoid this type of food