எத்தனை விதமான வேதி பொருட்கள் தொப்புள் கொடியில் உள்ளது என்று அறிவீர்களா?.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


நமது வீட்டில் இருக்கும் பெண் திருமணம் முடிந்து கருவுற்று கர்ப்படைந்து இருக்கும் சமயத்தில் அவளை தூக்கி வைத்து கொண்டாடுவோம். அவளுக்கு தேவையானவற்றை ஓடி ஓடி செய்து கவனிப்போம். நாம் என்னதான் கவனித்தாலும்., நம்மை சுற்றி உள்ள மாசடைந்த சுற்றுப்புற சூழலின் காரணமாக பல விதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. 

சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாக உருவாகும் வேதி பொருட்களின் மாற்றம் மற்றும் அதனால் நம்மை தெரியாமலேயே தாக்கும் நிகழ்வுகளால் பிறந்திருக்கும் குழந்தைகளும்., தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. 

தற்போது பிறக்கும் குழந்தைகளின் உடலில் சுமார் 200 க்கும் மேற்பட்ட வேதிபொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முதல் எச்சரிக்கையை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னை தலைமையமாக கொண்டு செயல்படும் சுற்றுசூழல் பணிக்குழுவானது கடந்த 2005 ம் வருடமே தெரிவித்தது. 

மேலும்., குழந்தைகள் தங்களது தாயாரின் வயிற்றில் இருக்கும் சமயத்திலேயே செயற்கை வேதியியல் பொருள்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்திருந்தது. மேலும்., குழந்தைகள் பிறந்த பின்னர் தொப்புள் கொடியை வெட்டிய பின்னர் அதில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை சோதனை செய்துள்ளனர். 

அந்த இரத்த மாதிரியில் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியுறும் வகையில் வேதிப்பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 413 செயற்கை வேதிப்பொருட்கள் உள்ளது என்றும்., இவையனைத்தும் தொழிலக வேதிப்பொருட்கள்., துரித உணவு பொருட்களில் இருக்கும் வேதி பொருட்கள்., ஆடை உற்பத்தி தொழில் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் என்று ஏராளமான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது.   

அவ்வாறு கண்டறியப்பட்ட வேதி பொருட்கள் அனைத்தும் புற்றுநோய்., மூளை மற்றும் நரம்பு மண்டத்தில் பாதிப்பு., வளர்ச்சி குறைபாடும் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தககவலும் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant ladies baby have a major problem by toxic chemistry products


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->