கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஆறாவது மாதம் முதல் பத்தாம் மாதம் வரை ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்.!!
pregnant ladies attend problem form sixth month to tenth month and solutions
பெண்கள் இல்லத்தில் திருமணம் முடிந்து கர்ப்பிணியாக இருக்கும் பொது அந்த பெண்ணை., அவரது கணவர் மட்டுமல்லாது கணவரின் குடும்பத்தார் மற்றும் பெண்ணின் குடும்பத்தார் தோலில் தூக்கி வைத்து சுமக்காத குறையாக அவரையும்., அவரது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாப்பார்கள்.
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு முதல் மாதத்தில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில்., முதல் மாதம் முதல் ஐந்து மாதம் வரை உடலில் ஏற்படும் பிரச்சனை குறித்து இந்த பதிவில் காண்போம்.
கர்ப்பிணி பெண்களின் ஆறாம் மாதம்:
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில்., ஆறாவது மாதத்தில் குடல் வால் பிரச்சனை., நீர் சுருக்கு., கருப்பை அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வேதனையை அளிக்கும். இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு கோரைக்கிழங்கு., முந்திரி பருப்பு., பச்சை திப்பிலியை சுமார் 15 கிராம் அளவிற்கு எடுத்து கொண்டு 200 மிலி அளவுள்ள பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
கர்ப்பிணி பெண்களின் ஏழாம் மாதம்:
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில்., ஏழாவது மாதத்தில் ஏற்படும் வயிறு வலியை குறைப்பதற்கு வெற்றிலை., சந்தனம் மற்றும் குட்டி விளா இலைகளை சுமார் 15 கிராம் அளவிற்கு சேர்த்து 200 மிலி பசும்பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்று வலி பிரச்சனையானது உடனடியாக நீங்கும்.
கர்ப்பிணி பெண்களின் எட்டாம் மாதம்:
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில்., எட்டாவது மாதத்தில் கை மற்றும் கால்களில் வலி ஏற்பட்டு அசதி மற்றும் பலவீனம் ஏற்படும். மேலும்., பசியெடுக்கும் சமயத்தில் சாப்பாடு சாப்பிடவேண்டும் என்று எண்ணம் இருக்காது. இதனை எதிர்கொள்வதற்கு கோரைக்கிழங்கு மற்றும் தாமரை பூவை சுமார் 15 கிராம் அளவிற்கு எடுத்து கொண்டு பாலில் கலந்து சாப்பிட்டால் இதனால் ஏற்படும் கருச்சிதைவு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
கர்ப்பிணி பெண்களின் ஒன்பதாம் மாதம்:
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில்., ஒன்பாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்களை நோய் தாக்காமல் இருப்பதற்கு அரசம்பட்டை மற்றும் மருதம்பட்டை பொடியை சுமார் 15 கிராம் அளவிற்கு எடுத்து கொண்டு 200 மிலி பாலுடன் சேர்த்து., சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் அண்டாமல் இருக்கும்.
கர்ப்பிணி பெண்களின் பத்தாம் மாதம்:
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில்., குழந்தை முழுவதும் வளர்ச்சி பெற்றதன் விளைவாக அடிவயிறானது தளர துவங்கும். அவ்வாறு தளரவில்லை என்றால் நாட்டு சர்க்கரையுடன் இலுப்பை பூவை சுமார் 30 கிராம் அளவிற்கு எடுத்து கொண்டு பாலில் கலந்து சாப்பிட்டால் குழந்தையின் நலமும் அதிகரிக்கும்.
குறிப்பு: கர்ப்ப காலங்களில் மட்டுமல்லாது பிற நேரங்களில் பெண்களில் அதிகளவு பாலை குடித்து வந்தால்., பாலில் இருக்கும் சத்துக்களின் மூலமாக உடல் நலம் மேம்பட்டு., உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கர்ப்ப நேரத்தில் பாலை அருந்தினால் குழந்தைகளின் நலனும் அதிகரிக்கும்.
இந்த செய்தியை படிப்பதற்கு இங்கே அழுத்தவும்.. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முதல் ஐந்து மாதங்கள் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்.!!
English Summary
pregnant ladies attend problem form sixth month to tenth month and solutions