குறைப்பிரசவம் ஏற்படுவதற்கு முன்னதாக ஏற்படும் வலிகள் மற்றும் குறைபிரசவத்தை உணர்த்தும் அறிகுறிகள்.!! - Seithipunal
Seithipunal


குழந்தைகளை வயிறில் சுமந்து அவர்களை பெற்றெடுப்பது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். அதை விட சிக்கலாக குறித்த தேதிக்கு முன்னதாகவே பிரசவம் நிகழும் பட்சத்தில்., அதாவது 37 வாரத்திற்கு முன்னதாக நடைபெறும் பிரசவங்கள் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படும். இந்த வகையில் பிறக்கும் குழந்தைகளை குறைபிரசவ குழந்தைகள் என்று அழைக்கின்றனர். 

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு., சுவாசிக்கும் போது சிரமம்., மஞ்சள் காமாலை., நிமோனியா போன்ற பாதிப்புகள் மற்றும் தொற்றுகள் ஏற்படுவதற்கு அதிகளவில் வாய்ப்புள்ளது. கீழ்காணும் அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து கொள்வது பெண்களின் நலனிற்கும்., குழந்தைகளின் நலனிற்கும் நல்லது. 

கர்ப்பமாக இருக்கும் காலத்தின் கடைசி நேரத்தில் கருப்பை சுருக்கம் ஏற்பட்டு ஏற்படும் வலியானது அதிகளவில் இருக்கும் பட்சத்தில் குறைமாத பிரசவமாக இருக்க கூடும். இந்த சமயத்தில் ஏற்படும் வலியானது வயிற்றை சுற்றி கயிறால் கட்டுவது போன்று இருக்கும். தொடர்ந்து ஏற்படாமலே விட்டு விட்டு வலி ஏற்படும். இதனை குறைப்பதற்கு என்ன செய்தாலும் வலி குறையாது. 

அதனை போன்றே இடுப்பில் ஏற்படும் அழுத்தம் அதிகமாக உணரப்படும் பட்சத்தில்., குறைமாத பிரசவ வலியாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. குழந்தை வெளி வருவதற்கு முயற்சி செய்யும் போது இந்த வலியானது ஏற்படுகிறது. இந்த வலி ஏற்படும் பட்சத்தில் குழந்தை பிறக்க கூடிய நிலையில் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது.  

எதிர்பாராத நேரத்தில் திடீரென பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் அதிகளவு நீர் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். இதற்கு மற்றொரு அறிகுறியாக சிவப்பு நிறத்தில் இருக்கும் இரத்தம் அல்லது நீர் வெளியேறுவதாகும். கர்ப்பப்பையின் வாய் அல்லது பிறப்புறுப்பின் வாய் திறந்து கொள்ளும் பட்சத்தில் நீரானது வெளியேற்றப்படுகிறது. 

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை போன்றே பிரசவத்தின் போது வலி ஏற்படும் அறிகுறியாக., மோசமான வயிற்று வலியை போல துவங்கும் பட்சத்தில் பிரசவத்திற்கான வலியின் அறிகுறிகள் ஆகும். இந்த வலி ஏற்படும் பட்சத்தில் சில மணி நேரத்தில் கண்டிப்பாக குறையாது. தரையில் உட்கார முடியாமலும்., நிற்க முடியாமலும் முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் அதிகளவு வலி ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த சமயத்தில் ஏற்படும் வலியானது முதுகு பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி., அதிக எடையுடன் கூடிய பொருளை சுமக்கும் பட்சத்தில் ஏற்படும் வலியை போன்று இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pains before the Miscarry or inaccurate delivery for pregnant ladies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->