ஜிப்மர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து! நேயாளிகள் அலறியடித்து அங்கும், இங்குமாக ஓட்டம்!!  - Seithipunal
Seithipunal


புதுவை கோரிமேட்டில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையில் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் உள்நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுடன் அவர்களது உறவினர்களும் தங்கி இருக்க ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் 2-வது மாடியில் நோயாளிகள் பதிவேடுகள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இன்று காலை 8.30 மணிக்கு திடீரென புகை மூட்டம் கிளம்பியது. சிறிது நேரத்தில் திடீயான தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனே அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து அங்கும், இங்குமாக ஓடத்தொடங்கினர். இதையடுத்து முன் எச்சரிக்கையாக அந்த கட்டிடத்தில் இருந்த அனைத்து நோயாளிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மற்ற வார்டுகளிக்கு மாற்றியுள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்த கோரிமேடு மற்றும் புதுவை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடத்தில் தீயை முழுவதும் அணைத்தனர். குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த திடீர் தீ விபத்து காரணமாக ஜிப்மர் மறுத்தவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jipmer hospital fire accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->