பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தழும்புகளை சரி செய்வது எப்படி?.!!
How to adjust the scars after pregnancy
பெண் கர்ப்பமாக இருந்து அவளின் தாய்மையை உணர்த்தும் வீரத்திற்கான ஒரு அடையாளமே வயிற்று தழும்புகள் ஆகும். இந்த பிரசவ தழும்புகள் வெளிப்படையாக தெரிவதை சில பெண்கள் விரும்பமாட்டார்கள். அந்த வகையில்., தழும்புகள் ஏற்படுவது குறித்தும் அதில் இருந்து மீள்வது குறித்த தகவலை இனி காண்போம்.
கர்ப்பமாக இருந்த நேரத்தில் குழந்தை வளர வளர., குழந்தையின் வளர்ச்சிக்கு இடம் அளிக்கும் வகையில் வயிற்றின் தசைகளானது விரிந்து தேவையான இடத்தை வழங்கும். பிரசவத்திற்கு பின்னர் குழந்தை வயிற்றில் இருந்து வெளியேறி வயிற்று மட்டும் இருப்பதால் திசுக்களின் மீள் தன்மையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இடுப்பு., இடுப்பின் பின்பக்கம்., தொடைகள் மற்றும் மார்பக பகுதிகளில் இந்த மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்த தழும்புகள் பெரும்பாலும் கருவுற்ற சுமார் 6 வது மாதத்திற்கு பின்னர் ஏற்பட துவங்கி., பிரசவத்திற்கு பின்னர் தொடர்கிறது. இந்த தழும்புகள் அம்மாவை போலவே சில நேரத்தில் அவரின் பெண் குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையானது திடீரென பரம்பரையாகவும் தொடர வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பானது இளம் வயதில் தாயாகும் பெண்களுக்கு ஏற்படலாம் வாய்ப்புள்ளது.
கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் அதிகளவு எடை உள்ள நபர்கள்., ஒரு குழந்தைக்கு மேலாக குழந்தையை ஒரே வயிற்றில் சுமப்பவர்கள்., குழந்தையின் எடை அதிகமாக உள்ள காரணம்., பனிக்குடத்தின் நீர் அளவு போன்றவற்றின் காரணமாக கர்ப்பகாலத்தில் தழும்புகள் உண்டாகிறது. இந்த தழும்புகள் சிவப்பு நிறத்தான பெண்களுக்கு இளம் பிங்க் நிறத்திலும்., கருப்பான பெண்களுக்கு வெளிர் நிறத்திலும் தழும்புகள் உண்டாகும்.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக வயிற்று தசைகளை வளரவிடாமல் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு ஸ்கின் ஸ்க்ரீம் அப்ளை செய்து இருக்கும் பட்சத்தில் தழும்புகள் குறையும். பிரசவத்திற்கு பின்னர் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்றாற்போல் உள்ள உள்ள க்ரீம்களை உபயோகம் செய்து கொள்ள வேண்டும்.
English Summary
How to adjust the scars after pregnancy