மதுரையில் எய்ம்ஸ்.! எய்ம்ஸ் மருத்துவமனை எதற்கு, யாருக்காக?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் மதுரையில் அமைக்க  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் நேற்று தெரிவித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசியில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதியதாக 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

அதில்  தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்கள் இடம்பெற்றன. டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) தமிழகத்தில் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு 5 இடங்களை ஒதுக்கியது. கடந்த 31.10.2014 அன்று மத்திய அரசுக்கு தமிழகத்தால் தேர்வு செய்யப்பட்ட இடங்களின் பட்டியலை அனுப்பியது.  

பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய இடங்கள் தமிழக அரசால் ஒதுக்கிய இடங்களாகும். இந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில் தற்போது மதுரையில் அமைக்க மத்திய அரசு  ஒப்புதல் வழங்கியுள்ளது. 

மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களின் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி  வெளியிட்டார். 

  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, கோன புதுப்பட்டி பகுதியில் தோப்பூர் அமைந்துள்ளது. 
  • மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து  2 கி.மீ தூரத்தில் எய்ம்ஸ் அமைய உள்ளது.
  • இதற்காக 194.07 ஏக்கர் நிலப்பரப்பை மத்திய அரசுக்கு ஒதுக்கியுள்ளது.
  • இதுவரை தென் மாவட்டங்களில் இருந்து உயர் சிகிச்சைக்காக சென்னை வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது மதுரையில் அமைந்துள்ளது அந்த பகுதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   
  • இந்த மருத்துவமனையை அமைக்க ரூ.1500 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மதுரை விமான நிலையத்தில் இருந்து தோப்பூர் பகுதிக்கு ரிங் ரோடு வழியாக சென்றால் 15 கி.மீ. தூரத்திலும், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தூரத்திலும் தோப்பூர் அமைந்துள்ளது.  
  • திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தோப்பூர் உள்ளது. 
  • எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முன் தோப்பூரில் தடையில்லாத மின்சார இணைப்பு மற்றும் குடிநீர், நான்கு வழி சாலை வசதி  உடனே ஏற்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
  • எய்ம்ஸ் மருத்துவமனையில் 100 மருத்துவர்கள் பணி ஏற்படுத்தப்படும்.
  • 100 மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏற்படுத்தப்படும்.
  • 750 படுக்கை வசதி கொண்ட நவீன மருத்துவமனை.
  • சுமார் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்.
  • மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIMS HOSPITAL AT MADURAI ABOUT ALL DETAIL


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->